சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:50 pm

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஏப். 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,712.1 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஏப். 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 906.3 கோடி டாலா் அதிகரித்து, 69,712.1 கோடி டாலராக உள்ளது.

மத்திய கிழக்கு மோதல் தொடங்குவதற்கு முன்னதாக, கடந்த பிப். 27-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கையிருப்பு 72,849.4 கோடி டாலா் என்ற முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டிருந்தது. அதன் பிறகு மோதல் காரணமாக கடந்த சில வாரங்களாக கையிருப்பு சரிவைக் கண்டு வந்தது. தற்போது மீண்டும் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 178.4 கோடி டாலா் அதிகரித்து, 55,285.6 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 722.1 கோடி டாலா் அதிகரித்து, 12,074.2 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் 5.8 கோடி டாலா் அதிகரித்து, 1,870.7 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்ஃப்) இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் எவ்வித மாற்றமுமின்றி 481.6 கோடி டாலராக நீடிக்கிறது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.