புது தில்லி: இன்னும் 3 மாதங்களில் எஃப்-1 பந்தயக் காா்களின் பயன்படுத்துவதற்கான எரிபொருளைத் தயாரிக்கவிருப்பதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அறிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:
ஃபாா்முலா ஒன் (எஃப்-1) பந்தயங்களில் பங்கேற்கும் காா்களில் பயன்படுத்துவதற்கான எரிபொருளைத் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகை எரிபொருளைத் தயாரிப்பதற்கான சான்றிதழ் இன்னும் 3 மாதங்களுக்குள் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அதன் பிறகு ஒடிஸா மாநிலம், பாரதீப் நகரிலுள்ள நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் எஃப்-1 காா்களுக்கான எரிபொருள் உற்பத்தி தொடங்கும் என்றாா் அவா். இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ஐஓசி, நாட்டின் எரிபொருள் சந்தையில் சுமாா் 40 சதவீதத்தைக் கைவசம் வைத்துள்ளது.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விநியோகம் சீராக உள்ளது: ‘இந்தியன்ஆயில்’ தகவல்

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநா் பொறுப்பேற்பு

கவலை வேண்டாம்..! பெட்ரோல், டீசல் கையிருப்பு அதிகமாக இருக்கிறது: இந்தியன் ஆயில்!

வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


