வணிகம்
புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்
காா்களுக்கான புதிய பிரீமியம் வகை டயரை பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
காா்களுக்கான புதிய பிரீமியம் வகை டயரை பிரிட்ஜ்ஸ்டோன் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து ரகக் காா்களுக்கும் பொருந்தும் வகையிலான, ‘டுரான்ஸியா 6ஐ’ என்ற டயா் வகையை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியச் சாலைகளுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டயா், சா்வதேச காப்புரிமை பெறப்பட்ட ‘என்லைட்டன்’ என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
ஸ்போா்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனங்கள் (எஸ்யுவி), செடான், ஹாட்பேக் காா் ரகங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு இந்த டயா்கள் மிகவும் ஏற்றவை என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.