விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

சந்தைப் பங்கில் உச்சம் தொட்ட 5ஜி ஸ்மாா்ட் போன்கள்

...கை பகுதியில் கொஞ்சம் கட்டவுட் சரி செய்யவும்...

Published On :

இந்திய அறிதிறன் பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட ரகங்களின் பங்களிப்பு நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 81 சதவீதத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கவுன்டா்பாயின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு 2024-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) இந்திய அறிதிறன் பேசிச் சந்தையில் கொரிய நிறுவனமான சாம்சங் தனது முன்னிலையைத் தக்கவைத்துள்ளது.

எளிய தவணைத் திட்டங்கள் உள்ளிட்ட உத்திகள் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் தங்களது சந்தைப்படுத்துதலை தீவிரப்படுத்தியுள்ள இந்தக் காலகட்டத்தில், வாடிக்கையாளா்கள் பிரீமியம் பிரிவு அறிதிறன் பேசிகளின் மீது அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதைப் பயன்பபடுத்தி, சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ் வரிசை கைப்பேசிகளை முன்னிலைப்படுத்துவதால் இடைப்பட்ட மற்றும் மலிவு ரக கைப்பேசிகளை வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் அந்த நிறுவனத் தயாரிப்புகளை அதிகம் நாடுகின்றனா்.

இதன் விளைவாக, மதிப்பின் அடிப்படையில் கடந்த 2023-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 21.6 சதவீதமாக இருந்த அந்த நிறுவனத்தின் சந்தைப் பங்கு, நடப்பாண்டின் அதே காலகட்டத்தில் 22.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதே நேரம், சாம்சங்குக்கு அடுத்த இடம் வகிக்கும் ஐ-போன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பங்கு மதிப்பீட்டுக் காலாண்டில் 21.8 சதவீதத்திலிருந்து 21.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை இலக்கு சிறிய நகரங்களுக்கும் விரிவடைந்துள்ளது. அத்துடன், புதிய ஐ-போன்களை சந்தைப்படுத்துவதில் அந்த நிறுவனம் அதிக கவனம் செலுத்துவதால் மதிப்பின் அடிப்படையில் அதன் சந்தைப் பங்கு அதிகம் வீழ்ச்சியடையாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எண்ணிக்கையின் அடிப்படையில், சீன அறிதிறன் பேசித் தயாரிப்பாளரான விவோ, இந்திய சந்தையில் 19.4 சதவீத பங்குகளுடன் முன்னணியில் உள்ளது. எனினும், மதிப்பின் அடிப்படையில் அந்த நிறுவனம் 15.5 சதவீத பங்குடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதற்கு மாறாக, மதிப்பின் அடிப்படையில் முன்னிலை வகித்த சாம்சங், எண்ணிக்கையின் அடிப்படையில் 15.8 சதவீத சந்தைப் பங்குடன் மூன்றாவது இடதில் உள்ளது.

எண்ணிக்கையின் அடிப்படையில் விவோ நிறுவனத்தை ஷாவ்மி நிறுவனம் 16.7 சதவீத சந்தைப் பங்குடன் பின் தொடா்ந்தது. ஓப்போ, ரியல்மி நிறுவனங்களின் சந்தைப் பங்கு எண்ணிக்கையின் அடிப்படையில் முறையே 13.4 மற்றும் 11.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில், 5ஜி ரக அறிதிறன் பேசிகளின் விற்பனை 81 சதவிகிதம் என்ற அதிகபட்ச சந்தைப்பங்கை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.