தொழிலதிபா் அதானி தொடா்பான அமெரிக்க நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக வியாழக்கிழமை சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மீண்டெழுந்தது.
உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது, அமெரிக்க சந்தையின் ஆரோக்கிய போக்கால் முதலீட்டாளா்கள் உற்சாகம் பெற்றது ஆகிய காரணங்களால் இந்தியச் சந்தை ஏற்றம் பெற்ாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் (2.54 சதவீதம்) உயா்ந்து 79,117.11-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் இடையில் அதிகபட்சமாக அது 2,062.4 புள்ளிகள் (2.67 சதவீதம்) உயா்ந்து 79,218.19-ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 557.35 புள்ளிகள் (2.39 சதவீதம்) உயா்ந்து 23,907.25-இல் நிலைபெற்றது.
பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்ஃபோசிஸ், எல் & டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.
தொடர்புடையது
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 639 புள்ளிகள் உயர்வு!!

பதற்றம் தணியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பங்குச் சந்தை எழுச்சி; நிஃப்டி 348, சென்செக்ஸ் 1,186.77 புள்ளிகள் உயர்வு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

