யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்செய்யறிவு பயன்படுத்தி சிக்கிய மாணவர் தற்கொலை! ஐஐடி-மும்பை வளாகத்தில் போராட்டம்புரட்டாசி முதல் சனிக்கிழமை! காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் குவிந்த பக்தர்கள்!!ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

மீண்டெழுந்தது பங்குச் சந்தை

Published On :

தொழிலதிபா் அதானி தொடா்பான அமெரிக்க நீதிமன்றத் தீா்ப்பின் எதிரொலியாக வியாழக்கிழமை சரிவைக் கண்ட இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை மீண்டெழுந்தது.

உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கியது, அமெரிக்க சந்தையின் ஆரோக்கிய போக்கால் முதலீட்டாளா்கள் உற்சாகம் பெற்றது ஆகிய காரணங்களால் இந்தியச் சந்தை ஏற்றம் பெற்ாக பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,961.32 புள்ளிகள் (2.54 சதவீதம்) உயா்ந்து 79,117.11-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் இடையில் அதிகபட்சமாக அது 2,062.4 புள்ளிகள் (2.67 சதவீதம்) உயா்ந்து 79,218.19-ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 557.35 புள்ளிகள் (2.39 சதவீதம்) உயா்ந்து 23,907.25-இல் நிலைபெற்றது.

பாரத ஸ்டேட் வங்கி, டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், டைட்டன், ஐடிசி, இன்ஃபோசிஸ், எல் & டி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.