மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நிதியாண்டின் முதல் நாளில் கடும் சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2025, 5:13 am

2025-26 நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் தொடங்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள வரி நாளை முதல் அமலுக்கு வருவதால் உலகளாவிய சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது.

இன்றைய வர்த்தக நேரம் தொடங்கியவுடன் நிஃப்டி 178 புள்ளிகள் சரிந்து 23,341 ஆகவும், சென்செக்ஸ் 536 புள்ளிகள் சரிந்து 76,878 ஆகவும் வர்த்தகமானது.

காலை 10. 30 நிலவரப்படி நிஃப்டி 23,292.25 புள்ளியாகவும் சென்செக்ஸ் 76,511.96 புள்ளியாகவும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றது.

காலை நிலவரப்படி, நிஃப்டியில் ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோ மற்றும் இண்டஸ்இண்ட் வங்கிகளின் பங்குகள் 4 சதவிகிதம் உயர்ந்துள்ளன. இன்ஃபோசிஸ், டிசிஎஸ் மற்றும் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகியவையின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.