தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

ஐபிஎல் போட்டியால் ஜியோ ஹாட்ஸ்டார் அடைந்த பலன்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பிவரும் ஜியோ ஹாட்ஸ்டார் தளம் 20 கோடி கட்டண சந்தாதாரர்களை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2025, 3:45 pm IST

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பிவரும் ஜியோ ஹாட்ஸ்டார் தளம் 20 கோடி கட்டண சந்தாதாரர்களை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் 10 கோடி சந்தாதாரர்களை எட்டியதாக ஜியோ அறிவித்திருந்த நிலையில், தற்போது குறுகிய காலத்தில் மிகப்பெரிய இலக்கை ஜியோ ஹாட்ஸ்டார் எட்டியுள்ளது. ஆங்கில ஊடகமான பூளும்பெர்க் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

வால்ட் டிஸ்ட்னி, போதி ட்ரீ மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகிய கூட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் உதய் சங்கர் கூறியதாவது,

’’நாங்கள் 20 கோடி கட்டண சந்தாதாரர்களை எட்டியுள்ளோம். இது உலகில் உள்ள பெரிய ஒளிபரப்பு ஓடிடி தளங்களில் ஒன்றாக எங்களை மாற்றியுள்ளது. குறுகிய காலத்தில் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான கட்டண சந்தாதாரர்களைப் பெற்றது மிகவும் நிறைவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிஸ்ட்னி + ஹாட்ஸ்டார் நிறுவனமானது பிப்ரவரி 14ஆம் தேதி ஜியோ சினிமாவுடன் இணைக்கப்பட்டு ஜியோ ஹாட்ஸ்டாரானது. ஆரம்பத்தில் 5 கோடி கட்டண சந்தாதாரர்கள் இருந்த நிலையில், கடந்த இரு மாதங்களில் 150 சந்தாதாரர்கள் அதிகரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.