ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பஹல்காம் விவகாரம்: சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாவது பற்றி...

News image
மும்பை பங்குச் சந்தை
Updated On :24 ஏப்ரல் 2025, 4:58 am

DIN

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கையின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடா்ந்து ஒரு வாரமாக லாபத்துடன் வர்த்தகமாகின.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை, தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்கள் வெளியேற உத்தரவு, சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து போன்ற அதிரடி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தூதரக ரீதியிலான இந்த அதிரடி நடவடிக்கைகளின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை சரிவுடன் இன்று காலை முதல் வர்த்தகமாகி வருகின்றது.

இன்று காலை பங்குச் சந்தை தொடங்கியவுடன், மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 134 புள்ளிகள் சரிந்து 79,982 புள்ளிகளாக வர்த்தகமானது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 51 புள்ளிகள் சரிந்து 24,278 ஆக விற்பனையாகி வருகின்றது.

13 முக்கிய துறைகளில் எட்டு துறைகளின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. உள்நாட்டில் கவனம் செலுத்தும் சிறிய மற்றும் நடுத்தர பங்குகள் நிலையாக வர்த்தகமாகி வருகின்றது.

சென்செக்ஸ் பட்டியலில் ஐடி நிறுவனங்களின் பங்குகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், நான்கு மாதங்களில் முதல்முறையாக 80,000 புள்ளிகளை கடந்து நேற்று வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.