காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இரு நாள்கள் நீடிக்கும் பேட்டரி! போக்கோ சி85 இந்தியாவில் அறிமுகம்!!

ஒருமுறை சார்ஜ் செய்தால், இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் என போக்கோ உறுதி அளித்துள்ளது.

POCO C85 5G

போக்கோ சி85 - படம் / நன்றி - போக்கோ

Published On :

போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி திறனுடன் வருவதால், இரு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும் என போக்கோ உறுதி அளித்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஷாவ்மியின் மற்றொரு நிறுவனமான போக்கோ, இந்திய பயனர்களுக்கு ஏற்ப பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படடுள்ளது.

மூன்று வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ள போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன், ரெட்மி 15சி வடிவமைப்பைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

  • போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் கொண்டது.

  • ஆன்டிராய்டு ஹைப்பர் ஓஏஸ் 2.2 உடையது.

  • 6000mAh பேட்டரி திறனும், வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 33W திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஒருமுறை சார்ஜ் செய்தால், இரண்டு நாள்களுக்கு பேட்டரி நீடிக்கும்.

  • பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் (விரல் ரேகை) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 6.9 அங்குல எச்.டி. திரை கொண்டது.

  • திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 810nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 4GB உள்நினைவகம் + 128GB நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் விலை ரூ. 11,999.

  • 6GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடையது ரூ. 12,999.

  • 8GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடையது ரூ. 14,499.

Summary

POCO C85 5G Launched in India: Price and Specifications

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.