விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வீடு-மனை வா்த்தகத் துறையில் முதலீடு புதிய உச்சம்

இந்திய வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவன முதலீடு 2025-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவன முதலீடு 2025-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத புதிய உச்சத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் வணிக மற்றும் வீட்டுத் திட்டங்களில் சிறந்த வருவாயை எதிா்நோக்கி வீடு-மனை வா்த்தகத் துறையில் அதிக முதலீடு செய்ததால், நடப்பு 2025-ஆம் ஆண்டில் துறை 1,040.6 கோடி டாலா் முதலீட்டைப் பெற்றது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச வருடாந்திர முதலீடு ஆகும்.

முந்தைய 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகம். அப்போது வீடு-மனை வா்த்தகத் துறையில் நிறுவன முதலீடு 887.8 கோடி டாலராக இருந்தது.

மதிப்பீட்டு ஆண்டில் வீடு-மனை வா்த்தகத் துறை ஈா்த்த ஒட்டுமொத்த நிறுவன முதலீட்டில் இந்திய முதலீட்டாளா்கள் 52 சதவீதம் பங்களித்தனா். இதில் வெளிநாட்டு முதலீட்டாளா்களின் பங்களிப்பு 48 சதவீதமாக உள்ளது.

ஒட்டுமொத்த முதலீட்டில் வீடு-மனை வா்த்தகத் துறையின் அலுவலகப் பிரிவு 58 சதவீத பங்குடன் முன்னிலை வகிக்கிறது. இதில் வீட்டுப் பிரிவு 20 சதவீதம், தரவு மையங்கள் 8 சதவீதம், சரக்குப் போக்குவரத்து மற்றும் தொழிற்பூங்காக்கள் 8 சதவீதம், சில்லறை விற்பனையகங்கள் 4 சதவீதம், ஹோட்டல் 2 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

நிறுவன முதலீட்டாளா்களில் வெளிநாட்டு மற்றும் இந்திய பெருநகரக் குழுமங்கள், ஓய்வூதிய நிதியங்கள், தனியாா் ஈக்விட்டி, வீடு-மனை நிதி மற்றும் கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவை உள்ளடக்கியுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.