வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (ஜன. 13 )இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 705 புள்ளிகள் சரிவுடனனும் நிஃப்டி 23 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.
வெளிநாட்டு நிதி வெளியேற்றம் காரணமாக பங்குச் சந்தை சரிந்தது மட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் பலவீனமாக இருந்தது.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 542 புள்ளிகள் சரிந்து 76,818.34 புள்ளிகளாக வணிகம் இருந்தது. மொத்த வணிகத்தில் இது 0.74 சதவீதம் சரிவாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 208.45 புள்ளிகள் சரிந்து 23,230.90 புள்ளிகளாக இருந்தது. இது மொத்த வணிகத்தில் 0.86 சதவீதம் சரிவாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை 77,378.91 புள்ளிகள் சரிந்திருந்த சென்செக்ஸ், மேலும் 705 புள்ளிகள் சரிந்து 76,629.90 புள்ளிகளாகத் தொடங்கியது.
கடந்த வெள்ளிக்கிழமை 23,431.50 புள்ளிகளில் முடிந்த தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, இன்று 250 புள்ளிகள் சரிந்து 23,195.40 புள்ளிகளுடன் தொடங்கியது. இவை கிட்டத்தட்ட 0.9% சரிவாகும்.
இதேபோன்று நிஃப்டி பட்டியலில் உள்ள நடுத்தர மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 2% வரை சரிவுடன் இருந்தன. வணிகம் தொடங்கிய 5 நிமிடங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டது.
4 நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம்
சென்செக்ஸ் பட்டியலில் ரூ. 425 கோடி லட்சம் கோடி வரை முதலீட்டாளர்கள் இழப்பை சந்தித்தனர்.
சென்செக்ஸ் பட்டியலில் ஆக்சிஸ் வங்கி, இந்தஸ் இந்த் வங்கி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் இருந்தன.
இதையும் படிக்க | ரயில்வேயின் காகித உறையில்கூட தமிழ் இல்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! ஐடி, ஆட்டோ துறை பங்குகள் இறக்கம்!
ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!!

பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 356, நிஃப்டி 122 புள்ளிகள் உயர்வு!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் சரிவால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

