ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கடும் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ரூ. 7.2 லட்சம் கோடி இழப்பு!

பங்குச்சந்தை இன்று(ஜன. 21) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 12:09 pm

DIN

பங்குச்சந்தை இன்று(ஜன. 21) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது.

பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 1,235.08 புள்ளிகள் குறைந்து 75,838.36 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 299.45 புள்ளிகள் குறைந்து 23,045.30 புள்ளிகளில் வர்த்தகமானது.

நேற்று பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இன்று மட்டும் சுமார் 7.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போலோ, டாடா கன்ஸ்யூமர், அல்ட்ராடெக் சிமென்ட், பிபிசிஎல், டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.

ஐசிஐசிஐ, ட்ரெண்ட், அதானி போர்ட்ஸ், எம்&எம், என்டிபிசி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப்பின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.