திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

2வது நாளாக உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை! ஐடி, மீடியா பங்குகள் உயர்வு!

சென்செக்ஸ் 115 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்வுடன் இருந்தன.

News image

கோப்புப் படம்

Updated On :23 ஜனவரி 2025, 6:56 pm IST

இந்திய பங்குச் சந்தை வணிகம் தொடர்ந்து 2வது நாளாக இன்று (ஜன. 23) உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 115 புள்ளிகளும் நிஃப்டி 23,200 புள்ளிகளுக்கு மேலும் உயர்வுடன் இருந்தன.

துறை ரீதியாக ஐடி, மீடியா, ஆட்டோ துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.39 புள்ளிகள் உயர்ந்து 76,520.38 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் உயர்வாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,205.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.22 சதவீதம் உயர்வாகும்.

வணிக நேரத் தொடக்கத்தில் 76,414.52 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் அதிகபட்சமாக 76,743.54 புள்ளிகள் வரை உயர்ந்தது. சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில், அதிகபட்சமாக 76,202.12 புள்ளிகள் வரை சரிந்தது. வணிக நேர முடிவில் 115 புள்ளிகள் உயர்ந்து 76,520 புள்ளிகளாக நிறைவு பெற்றது.

15 நிறுவனப் பங்குகள் உயர்வு

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 தரப் பங்குகளில் 18 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 12 நிறுவனங்கள் சரிவுடன் இருந்தன.

அதிகபட்சமாக அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் 6.80% உயர்ந்திருந்தன. இதற்கு அடுத்தபடியாக சொமாட்டோ 2.55%, எம் & எம் 2.13%, சன் பார்மா 1.93%, டெக் மஹிந்திரா 1.75%, டாடா மோட்டார்ஸ் 1.32%, டைட்டன் கம்பெனி 1.26%, டாடா ஸ்டீல் 1.13% உயர்ந்திருந்தன.

இதேபோன்று கோட்டாக் வங்கி -1.19%, எச்சிஎல் டெக் -1.14%, பவர் கிரிட் -1.08%, ரிலையன்ஸ் -1.06%, எஸ்பிஐ -1.01%, எச்யுஎல் -0.91%, ஆக்சிஸ் வங்கி -0.87%, எல்&டி -0.43% சரிவுடன் இருந்தன.

நிஃப்டி நிலவரம்

நிஃப்டியைப் பொறுத்தவரை, வணிக நேரத் தொடக்கத்தில் 23,128.30 புள்ளிகளுடன் தொடங்கி, அதிகபட்சமாக 23,270.80 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் அதிகபட்சமாக 23,090.65 புள்ளிகள் வரை சரிந்தது.

நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில் கோ டிஜிட், கோஃபோர்க், ஸென்சார் டெக், ஆம்பர் என்டர்பிரைசஸ், சொனாட்டா சாஃப்வேர், பாரத் டைனமிக்ஸ், பிடிலைட் உள்ளிட்டவை ஆதயப் பட்டியலில் இருந்தன.

வர்த்மான் டெக்ஸ்டைல்ஸ், ராமகிருஷ்ண ஃபோர்க், ஐநாக்ஸ் விண்ட், அலெம்பிக் பார்மா, பிஎன்பி ஹவுசிங் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.