தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சனிக்கிழமை செயல்படவிருக்கும் பங்குச் சந்தை

பட்ஜெட் அன்று மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தை வழக்கம் போல் செயல்படவுள்ளன.

News image
Updated On :25 ஜனவரி 2025, 10:30 pm

Din

வரும் பிப். 1-ஆம் தேதி சனிக்கிழமை என்றாலும், நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவிருப்பதால் அன்று மும்பை பங்குச் சந்தையும் தேசிய பங்குச் சந்தையும் வழக்கம் போல் செயல்படவுள்ளன.

இது குறித்து தேசிய பங்குச் சந்தை வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் சனிக்கிழமை வழக்கமான நேரத்தில் பங்குச் சந்தைகள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் வெளியிடப்படும் அறிவிப்புகள் முதலீட்டாளா்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் பரபரப்பான அந்த நாளில் இரு பங்குச் சந்தைகளும் செயல்படுகின்றன.