யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சரிவில் முடிந்த பங்குச் சந்தை! 25,000-யைக் கடந்த நிஃப்டி!

பங்குச்சந்தைகள் 2-வது நாளாக சரிவுடன் நிறைவு...

News image
கோப்புப் படம்- IANS
Updated On :3 ஜூலை 2025, 12:48 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) 2-வது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,540.74 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் அதிகபட்சமாக 83,850.09 புள்ளிகள் வரை எட்டியது.

வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 170.22(0.2%) புள்ளிகள் குறைந்து 83,239.47 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.

அதேபோல தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25,505.10 என்ற புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் வா்த்தக இறுதியில் 48.10(0.19%) புள்ளிகள் குறைந்து 25,405.30 புள்ளிகளில் நிறைவடைந்தது. நேற்று நிஃப்டி 25,000-க்கும் கீழ் சென்ற நிலையில் இன்று மீண்டு 25,000-யைக் கடந்து முடிந்துள்ளது.

முதலில் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்ட நிலையில் பின்னர் ஏற்ற, இறக்கத்திலேய இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் அதிகபட்சத்திலிருந்து 610 புள்ளிகள் சரிந்தது, நிஃப்டி 182 புள்ளிகள் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்செக்ஸில் 30 பங்குகளில் 18 பங்குகள் விலை குறைந்தன. கோட்டக் மஹிந்திரா வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை அதிகம் இழப்பைச் சந்தித்த முதல் 5 நிறுவனங்கள். இவை 1.9% முதல் 0.76% வரை சரிந்தன.

அதேநேரத்தில் மாருதி சுசுகி, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், என்டிபிசி மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

summary

Benchmark stock market indices closed lower on Thursday, Sensex settles 170 points lower, Nifty below 25,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.