நிஃப்டி 0.74% சரிவு; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!

நிஃப்டி 0.74 சதவீதத்துடனும் சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகம் நிறைவு!
பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம்
Published on
Updated on
1 min read

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளின் பங்குகள் இன்றைய பங்கு வர்த்தகத்தின்போது பின்னடைவை சந்தித்ததன் எதிரொலியாக, நிஃப்டி மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சென்செக்ஸ் 363.24 புள்ளிகள் அதாவது 0.78 சதவீதம் சரிவடைந்து 80,737.51 என்ற நிலையிலும், நிஃப்டி 174.10 புள்ளிகள் அல்லது 0.70 சதவீதம் சரிந்து 24,542.50 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு நிதி அதிகரிப்பு போன்றவை, பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சிவப்பு அம்புகுறியுடன்தான் முடிவடைந்துள்ளது. அதிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமான இழப்பை சந்தித்துள்ளன.

வர்த்தகத்தின் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாள்களாக லாபம் பார்த்து வந்த பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் இன்று சரிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தின்போது, ஸொமாட்டோ, டாடா ஸ்டீல், எம் அன்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

அதே வேளையில், எல் அன்ட் டி, பஜாஜ் பினான்ஸ், பார்தி ஏர்டெல், எச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்டவை சரிவை நோக்கி நகர்ந்துள்ளன. 13 துறைகளின் பங்குகளில் 7 பங்குகள் லாபம் அடைந்தாலும் அவை சுமார் ரகம்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com