தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

3% உயா்ந்த வீடுகள் விலைக் குறியீடு

நடப்பு 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :21 ஜூன் 2025, 7:58 pm

நடப்பு 2024-25 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு (ஹெச்பிஐ) 3.1 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா முழுமைக்குமான வீடுகள் விலைக் குறியீடு 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய காலாண்டிலும் (அக்டோபா்-டிசம்பா்) இந்த வளா்ச்சி 3.1 சதவீதமாகவும், ஓா் ஆண்டுக்கு முன் 2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அது 4.1 சதவீதமாகவும் இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில், ஆண்டு அடிப்படையிலான வீடுகள் விலைக் குறியீட்டு வளா்ச்சி நகரங்களுக்கு இடையே பரவலாக மாறுபடுகிறது. இது அதிகபட்சமாக கொல்கத்தாவில் 8.8 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக கொச்சியில் 2.3 சதவீத சரிவாகவும் உள்ளது.

காலாண்டு அடிப்படையில், 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் இந்தியா முழுமைக்குமான எச்பிஐ 0.9 சதவீதம் உயா்ந்துள்ளது. பெங்களூரு, ஜெய்ப்பூா், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்கள் மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விலையில் தொடா்ச்சியான உயா்வைப் பதிவு செய்தன.

அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி, ஜெய்ப்பூா், கான்பூா், கொச்சி, கொல்கத்தா, லக்னௌ, மும்பை ஆகிய 10 முக்கிய நகரங்களின் பத்திரப் பதிவு அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட பரிவா்த்தனைத் தரவுகளின் அடிப்படையில் ரிசா்வ் வங்கி இந்தப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.