ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்தியாவில் 200 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்ய ஹையர் நிர்ணயம்!

ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 மார்ச் 2025, 3:58 pm

DIN

நொய்டா: ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் 200 கோடி அமெரிக்க டாலர் விற்பனை நிறுவனமாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

வீட்டு உபகரணங்கள் தயாரிப்பாளரான ஹையர், புதிய ஏசி உற்பத்தி மற்றும் மோல்டிங் அலகுகளை அமைக்க 2024 முதல் 2028 க்கு இடையில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தது.

ஏற்கனவே புனே மற்றும் நொய்டாவில் உள்ள அதன் ஆலைகளில் இதுவரை ரூ.2,400 கோடியை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஹேயர் இந்தியா 15 லட்சம் ஏசி யூனிட்டுகளிலிருந்து ஆண்டுக்கு 40 லட்சம் ஏசி யூனிட்டுகளை உற்பத்தியை செய்யும்.

தற்போது நிறுவனத்திடம் 15 லட்சம் ஏசி யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இருப்பினும், இந்தியாவில் ஏசி சந்தை வளர்ந்து வரும் விதம் 2027ல் உற்பத்தி பற்றாக்குறையாக இருக்கும் என்றார்.

வரவிருக்கும் புதிய தொழிற்சாலையால், இது 25 லட்சம் யூனிட்களாக இருக்கும் என்றார் ஹையர் அப்ளையன்சஸ் இந்தியா தலைவரான என்.எஸ்.சதீஷ்.

தென்னிந்தியாவில் ஒரு ஆலையை அமைக்க உள்ளதாகவும் அதன் முதலீட்டை விரைவில் அறிவிப்போம் என்றார். 2024ல் ஹையர் வருவாய் 36 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ.8,900 கோடியாக உயர்ந்தது. அதே வேளையில், நடப்பாண்டு அதன் வருவாய் ரூ.11,500 கோடியைத் தாண்டும் என்றார்.

இந்தியாவில் ஒரு பெரிய வாய்ப்பை நாங்கள் காண்கிறோம். பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை நீங்கள் பார்க்கும்போது, இது மிகச் சிறப்பாக செயல்படுகிறது. ஹேயர் அப்ளையன்சஸ் இந்தியா எப்போது 2 பில்லியன் டாலர் நிறுவனமாக மாறும் என்ற கேள்விக்கு அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், நிச்சயமாக 2 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.