மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஏப்ரல் முதல் வாகனங்களின் விலையை உயர்த்தும் ஹோண்டா இந்தியா!

அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக ஏப்ரல் முதல், அனைத்து மாடல்களின் விலையை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2025, 1:21 pm

DIN

புதுதில்லி: அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளின் தாக்கத்தை ஓரளவு ஈடுசெய்வதற்காக ஏப்ரல் முதல், அனைத்து மாடல்களின் விலையை உயர்த்துவதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா இன்று தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக ஹோண்டா கார்ஸ் இந்தியா ஏப்ரல் 2025 முதல் அனைத்து மாடல்களிலும் விலையை மாற்றியமைக்கும் என்று ஹோண்டா கார்ஸ் இந்தியா துணைத் தலைவர் - சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை, குணால் பெஹல் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செலவுகளை நிறுவனம் தக்கவைத்து கொள்ள முயன்ற போதிலும், சில விலை திருத்தங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றார்.

இந்த விலை உயர்வு மாடல் மற்றும் மாறுபாட்டிற்கு ஏற்ப மாறுபடும் அதே வேளையில் அமேஸ், சிட்டி, சிட்டி - ஹைபிரிட் மின்சார வாகனம் மற்றும் எலிவேட் உள்ளிட்ட அனைத்து ஹோண்டா மாடல்களுக்கும் இது பொருந்தும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.