புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் அதன் வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் செலவுகளின் தாக்கத்தை ஈடுசெய்யும் வகையில், ஏப்ரல் 1 முதல் அதன் வர்த்தக வாகனத்தின் விலையை 1.5% வரை உயர்த்தப்போவதாக தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து பிற செலவுகளின் தாக்கத்தையும் ஓரளவு ஈடுசெய்ய, வர்த்தக வாகனத்தின் விலையை உயர்த்த நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தது.
வணிக வாகன விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், வர்த்தக வாகனத்தின் மாடலை பொறுத்து இந்த அதிகரிப்பு மாறுபடும் என்றது.
180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள டாடா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகனங்கள், வர்த்தக வாகனங்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில், டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ.437.75 ஆக முடிவடைந்தன.
Summary
Tata Motors said it will increase the prices of its commercial vehicle from April 1.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பைக் மீது பேருந்து மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

இவி-கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்த டாடா! நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கும்!
பொறுப்பால் உயரும் பெருமை!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



