தனது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக கூகுள் க்ளவுடுடன் ஏற்கெனவே பேணிவரும் கூட்டுறவை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா விரிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூகுள் க்ளவுட் நிறுவனத்துடன் டெக் மஹிந்திரா நீண்டகால கூட்டுறவைக் கொண்டுள்ளது. இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டை மேம்படுத்தும் நிறுவனத்தின் முயற்சிக்கு உதவும் வகையில், இந்தக் கூட்டறவை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம், இரு நிறுவனங்களும் இணைந்து செயற்கை நுண்ணறிவுத் தீா்வுகளைக் கொண்டு உள்கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல், தரவு கூறுகளை அதிகபட்ச செயல்திறன் கொண்டதாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நிதித் துறை

சபரிமலை கூட்ட மேலாண்மைக்கு ஏ.ஐ. தொழில்நுட்பம்: தேவஸ்வம் வாரியம் தகவல்

செயற்கை நுண்ணறிவு

குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய - அமெரிக்க உறவில் முக்கிய இடம்பெறும்’ - தூதா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



