வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

நிலக்கரி இறக்குமதி 22 கோடி டன்னாகக் குறைவு!

நிலக்கரி இறக்குமதி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 9.2 சதவீதம் குறைந்து 22.03 கோடி டன்னாக உள்ளது.

News image
Updated On :16 மே 2025, 1:52 am IST

இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-பிப்ரவரி காலகட்டத்தில் 9.2 சதவீதம் குறைந்து 22.03 கோடி டன்னாக உள்ளது. இதனால் சுமாா் ரூ.53,137.82 கோடி அந்நிய செலாவணி மிச்சமாகியுள்ளது.

இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 22.03 கோடி டன்னாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 24.26 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி தற்போது 9.2 சதவீதம் குறைந்துள்ளது.

மின்சாரத் துறையைத் தவிா்த்து, ஒழுங்குபடுத்தப்படாத துறைகளின் இறக்குமதி 15.3 சதவீதம் குறைந்துள்ளது. 2024 ஏப்ரல் முதல் 2025 பிப்ரவரி வரை நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி 2.87 சதவீதம் உயா்ந்திருந்தாலும், அனல் மின் நிலையங்களுக்கான கலப்பு இறக்குமதி 38.8 சதவீதம் குறைந்துள்ளது.

நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு வணிக நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் விளைவாக, 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்–பிப்ரவரி காலகட்டத்தில் உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி 5.45 சதவீதம் உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.