பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

ஆயில், ஸ்டீல், நிதி, ஏற்றுமதி, வங்கித் துறை பங்குகள் ஏற்றம்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (நவ. 26) உயர்வுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 393 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 26,000 புள்ளிகளுக்கு அருகேவும் வணிகத்தின் தொடக்கம் இருந்தது.

காலை 11 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 710 புள்ளிகளும் நிஃப்டி 26,088 புள்ளிகள் வரையும் வணிகமானது. குறிப்பாக ஆயில், ஸ்டீல், நிதி, ஏற்றுமதி, வங்கித் துறை பங்குகள் ஏற்றத்துடன் வணிகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வணிக நேரத் தொடக்கத்தில் 393 புள்ளிகள் உயர்ந்து 84,503 ஆக வணிகமானது. காலை 11 மணி நிலவரப்படி 715 புள்ளிகள் உயர்ந்து 85,302.32 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.

இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வணிக நேரத் தொடக்கத்தில்

25,842 புள்ளிகளாக வணிகமானது. காலை 11 மணிநிலவரப்படி 221 புள்ளிகள் உயர்ந்து 26,106 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com