வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப். 20, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,632.90என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 410.13 உயர்ந்து 78,903.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 109.05 புள்ளிகள் உயர்ந்து 24,462.60 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.27 சதவீதம், 0.09 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
அதேபோல சென்செக்ஸ் 30 பங்குகளில் எஸ்பிஐ, ட்ரெண்ட், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்ந்தும் ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் சரிந்தும் வரத்தகமாகின்றன.
துறைவாரியாகப் பார்க்கும்போது, நிஃப்டி ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் எண்ணெய் & எரிவாயு, உலோகப் பங்குகள் சரிந்து வருகின்றன.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 95.54 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.82 ஆக உள்ளது.
Summary
Stock Market: Sensex rises 400 points, Nifty above 24,400
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5-வது நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஆட்டோ, ஐடி பங்குகள் உயர்வு!

மீளுமா பங்குச்சந்தை? தொடர்ந்து 2-ம் நாளாக சரிவுடன் வர்த்தகம்!

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் கடும் சரிவு!







