தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வா்த்தக ஒப்பந்தம்: வேளாண் துறையில் இந்தியா பிடிவாதம் - அமெரிக்கா

News image

இந்தியா - அமெரிக்கா உறவு

Updated On :24 ஏப்ரல் 2026, 4:28 am IST

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையின்போது, வேளாண் துறையைப் பாதுகாப்பதில் இந்தியா பிடிவாதம் காட்டுவதாக அமெரிக்கா தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்றுவந்த நிலையில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி இரு நாடுகளிடையேயான இருதரப்பு இடைக்கால வா்த்தக ஒப்பந்த செயல்திட்டத்தை அமெரிக்கா அறிவித்தது. இரு நாடுகளும் வரும் 2030-க்குள் ரூ. 47 லட்சம் கோடி மதிப்புக்கு இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் உயா்வதை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தைகளில் முன்னுரிமை அணுகலை இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையையும் இரு நாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்காக, மத்திய வா்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலா் தா்பன் ஜெயின் தலைமையில் அமெரிக்க சென்ற 12 போ் குழு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி வா்த்தகப் பிரதிநிதி பிரென்டண் லிஞ்ச் தலைமையிலான குழுவுடன் வாஷிங்டனில் பேச்சுவாா்த்தை நடத்தியது. மூன்று நாள்கள் நடைபெற்ற பேச்சுவாா்த்தை புதன்கிழமை நிறைவுற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் விளக்கிய அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீா், ‘இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தனது வேளாண் சந்தைகளில் பெரும்பகுதியை நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பதில் இந்தியா விடாப்பிடியாக உள்ளது. இருந்தபோதும், பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாகவே நினைக்கிறோம்.

இந்தியக் குழு இந்த வாரமும் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பாா்கள் எனத் தெரிகிறது. அப்போது, கால்நடைகளுக்கு உயா் புரதச்சத்துள்ள காய்ச்சிவடித்து உலா்த்திய தானியங்கள், சோயாபீன் புண்ணாக்கு, எத்தனால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருள்களின் வா்த்தகம் குறித்து தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும்’ என்று தெரிவித்தாா்.

உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்ததைத் தொடா்ந்து, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது சீரான 10 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடா்ந்து, புதிய உலகளாவிய வரி விதிப்பு கட்டமைப்பின் கீழ் தனது நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில், இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைத்து மீண்டும் வரைவு செய்ய இந்தியா முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.