2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று (பிப். 1) சரிவுடன் தொடங்கியது. சென்செக்ஸ் 296 புள்ளிகளுடனும் நிஃப்டி 122 புள்ளிகளுடன் சரிவுடன் தொடங்கின.
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதால், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன. தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 9.30 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 286 புள்ளிகள் சரிந்து 82,293 புள்ளிகளுடன் வணிகமாகி வருகின்றன.
இதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டி எண் நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து 25,312 புள்ளிகளாக வணிகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 14 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன. எஞ்சிய 16 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வணிகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!

தொடா் சரிவில் பங்குச் சந்தை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

புதுச்சேரியில் ரூ. 14,300 கோடியில் பட்ஜெட்: மத்திய அரசு அனுமதி
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



