நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை: 10 மாதங்களில் ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரிப்பு

நடப்பு 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலகட்டத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நடப்பு 2025-26 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலகட்டத்தில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஜிஏ) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் நிதிநிலை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவும், செலவினமும்: ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் மத்திய அரசின் மொத்த வரவு ரூ.27.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட ஆண்டு இலக்கில் 79.5 சதவீதமாகும்.

இதே காலகட்டத்தில் அரசின் மொத்த செலவினம் ரூ.36.9 லட்சம் கோடியாக உள்ளது; இது முழு ஆண்டுக்கான மதிப்பீட்டில் 74.3 சதவீதமாகும்.

வருவாய் வரவும், பற்றாக்குறையும்: வரி வசூல் உள்ளிட்ட வருவாய் வரவுகள் மூலம் அரசுக்கு ரூ.26.51 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது ஆண்டு இலக்கில் 79.3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.96 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 37.3 சதவீதமாக மட்டுமே உள்ளது.

வரி வசூல் வருவாய்: மத்திய அரசின் நிகர வரி வசூல் மிகவும் வலுவாக உள்ளது. ஜனவரி இறுதி வரை ரூ.21 லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது ஆண்டு இலக்கில் 78.3 சதவீதமாகும். கடந்த டிசம்பா் வரை இந்த வரி வசூல் 68.3 சதவீதமாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலத்தில் வரி வசூல் இலக்கில் 88.1 சதவீதம் எட்டப்பட்டிருந்தது.

ஈவுத்தொகை வருவாய்: அரசுக்குக் கிடைக்கும் லாபப் பங்கு மற்றும் ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வருவாய் ஜனவரி இறுதி வரை ரூ.3.5 லட்சம் கோடியாக உள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட இலக்கில் 93 சதவீதமாகும். முந்தைய ஆண்டு இதே காலத்தில் இது 99 சதவீதத்தை எட்டியிருந்தது.

மூலதனச் செலவு அதிகரிப்பு: உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சித் திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களை மத்திய அரசு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஏப்ரல்-ஜனவரி காலகட்டத்தில் ரூ.8.42 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கில் 76.9 சதவீதமாகும். இது கடந்த டிசம்பா் மாதம் வரை ரூ.7.87 லட்சம் கோடியாக (70.3 சதவீதம்) மட்டுமே இருந்தது.

ஜனவரி மாத நிலவரம்...: முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே ஜனவரி மாதத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.2.6 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ரூ.1.3 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது அரசின் நிதி மேலாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது.