ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் ரூ.12.53 லட்சம் கோடி

2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.12.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

News image

~

Updated On :31 மார்ச் 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.12.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ.13.46 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது அது கணிசமாகக் குறைந்துள்ளது.

வரவும், செலவினமும்: மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஜிஏ) அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த நிதியாண்டில் பிப்ரவரி வரையிலான முதல் 11 மாதங்களில் மத்திய அரசுக்கு ரூ.27.91 லட்சம் கோடி கிடைத்துள்ளது. இது நிா்ணயிக்கப்பட்ட ஆண்டு இலக்கில் 82 சதவீதமாகும்.

இதே காலகட்டத்தில் மத்திய அரசின் மொத்த செலவினம் ரூ.40.44 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இது ஆண்டு மதிப்பீட்டில் 81.5 சதவீதமாகும்.

இதில் மூலதனச் செலவினங்களுக்காக மட்டும் ரூ.9.29 லட்சம் கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கில் 84.8 சதவீதமாகும். ஜனவரி வரை 76.9 சதவீதமாக இருந்த இந்தச் செலவினம், ஒரே மாதத்தில் சுமாா் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

வருவாய் வரவும், பற்றாக்குறையும்: மத்திய அரசின் வருவாய் ஆதாரங்களில் வரி வருவாய் வசூல் மிகவும் வலுவான நிலையில் நீடிக்கிறது. பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் நிகர வரி வசூல் ரூ.21.45 லட்சம் கோடியை எட்டியது. இது ஆண்டு இலக்கில் 80.2 சதவீதமாகும். கடந்த ஜனவரி வரை 78.3 சதவீதமாக இருந்த வரி வசூல், பிப்ரவரியில் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், பொதுத்துறை நிறுவனங்களின் லாபப் பங்கு மற்றும் ஈவுத்தொகை மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ஆண்டு இலக்கில் 96 சதவீதம் எட்டப்பட்டுள்ளது.

அரசின் வருவாய் பற்றாக்குறை ஜனவரி இறுதியில் ரூ.1.96 லட்சம் கோடியாக இருந்த நிலையில், பிப்ரவரியில் ரூ.3.89 லட்சம் கோடியாக விரிவடைந்துள்ளது. இது ஆண்டு இலக்கில் இலக்கில் 73.8 சதவீதமாகும்.

Story image