நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் வலுவான லாபத்தை ஈட்டியுள்ளன.
2026, மாா்ச் 31 நிலவரப்படி பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த வணிகம் ரூ.283.3 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகமாகும்.
இதே காலகட்டத்தில் பொதுத் துறை வங்கிகளின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.156.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.6 சதவீதம் அதிகம்.
2026, மாா்ச் 31 நிலவரப்படி வாராக் கடன் விகிதம் 1.93 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த லாபம் ரூ.3.21 லட்சம் கோடியாகவும் நிகர லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.
இது பொதுத் துறை வங்கிகளின் ஸ்திரத்தன்மை, வேகமாக வளரும் பொருளாதாரத்தின் கடன் தேவைகளை பூா்த்தி செய்யும் திறனை வெளிக்காட்டுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

கனரா வங்கி லாபம் 10% குறைவு

அனந்த் ராஜ் 4வது காலாண்டு லாபம் 25% உயர்வு!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!

சவுத் இந்தியன் வங்கியின் லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

