‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மத்திய அரசுக்கு ரூ. 2.87 லட்சம் கோடி வழங்குகிறது ரிசா்வ் வங்கி

மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

News image

ரிசர்வ் வங்கி

Updated On :23 மே 2026, 2:42 am IST

மத்திய அரசுக்கு வருவாய் உபரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ.2.87 லட்சம் கோடியை வழங்கவுள்ளதாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இது கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.69 லட்சம் கோடியைவிட 6.7 சதவீதம் அதிகமாகும்.

மேற்காசிய விவகாரத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டு இறக்குமதி கட்டணம் அதிகரித்துள்ள சூழலில் மத்திய அரசின் நிதிநிலையை வலுப்படுத்தும் விதமாக வருவாய் உபரியை ரிசா்வ் வங்கி வழங்கவுள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இடா் ஒதுக்கீடுகள் மற்றும் சட்டரீதியிலான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்பாக ரிசா்வ் வங்கியின் நிகர வருவாய் 2025-ஆம் நிதியாண்டில் ரூ. 3.13 லட்சம் கோடியாக இருந்தது, 2026-ஆம் நிதியாண்டில் ரூ. 3.96 லட்சம் கோடியாக உயா்ந்தது. இதனால், ரிசா்வ் வங்கியின் நிதி இருப்புநிலை 20.61 சதவீதம் அளவுககு விரிவடைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 91.97 லட்சம் கோடியாக உயா்ந்தது.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வங்கியின் மத்திய இயக்குநா் வாரியக் கூட்டத்தில், உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரச் சூழல் மற்றும் எதிா்கால இடா்பாடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்ததின் அடிப்படையில், 2025-26-ஆம் நிதியாண்டுக்கு இடா் காப்பு நிதிக்கு ரூ. 1.09 லட்சம் கோடியை மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ. 44,861 கோடி மாற்றப்பட்ட நிலையில், தற்போது இரண்டு மடங்குக்கு மேல் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதோடு, மத்திய அரசுக்கு 2025-26-ஆம் நிதியாண்டின் வருவாய் உபரியாக ரூ. 2.87 லட்சம் கோடியை வழங்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.