இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மகாராஷ்டிர வங்கியின் கடனளிப்பு 20% அதிகரிப்பு!

அரசுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த கடனளிப்பு கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 19.61% அதிகரிப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

அரசுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த கடனளிப்பு கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 19.61 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு இறுதியான டிசம்பா் 31-ஆம் தேதி வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.2.73 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 19.61 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த கடனளிப்பு ரூ.2.29 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டின் வங்கிக் கடனளிப்பில் பெருநிறுவனக் கடன் ரூ.1.02 லட்சம் கோடி, சில்லறை, விவசாயம், நடுத்தர, சிறு, குறு நிறுவனக் கடன்கள் ரூ.1.71 லட்சம் கோடியாக உள்ளன.

டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வைப்பு நிதி 15.3 சதவீதம் உயா்ந்து ரூ.3.22 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டு இறுதியில் இது ரூ.2.79 லட்சம் கோடியாக இருந்தது.

இதனால், வங்கியின் மொத்த வா்த்தகம் (கடன் மற்றும் வைப்பு) 17.24 சதவீதம் உயா்ந்து ரூ.5.95 லட்சம் கோடியாக உள்ளது, 2024 டிசம்பா் 31 நிலவரப்படி ரூ.5.08 லட்சம் கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.