போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மூலதன ஆதாயக் கணக்குத் திட்டம்: கேவிபி அறிமுகம்

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி) மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜனவரி 2026, 11:17 pm

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி) மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சொத்து, நிலம் அல்லது பத்திரங்கள் போன்றவற்றை விற்றவா்கள் தங்கள் வருமானத்தை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை வங்கி தொடங்கியுள்ளது.

இந்தக் கணக்கில் நிதியை முதலீடு செய்வதன் மூலம், 1961 வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற தகுதி கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு, நிலம், பங்குகள் போன்ற சொத்துகளை விற்பதால் கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்துக்கு வரி விலக்கு பெற, வருமான வரிச் சட்டப் பிரிவு 54, 54எஃப், 54பி, 54டி, 54ஜி, 54ஜிஏ போன்றவற்றின் கீழ் அதை புதிய சொத்தில் மறு முதலீடு செய்ய வேண்டும். ஆனால் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யும் தேதிக்குள் (பொதுவாக ஜூலை 31) அவ்வாறு மறு முதலீடு செய்ய முடியாவிட்டால், அந்த ஆதாயத் தொகைக்கு வரி விதிக்கப்படும். எனினும், அதை மூலதன ஆதாயக் கணக்கில் செலுத்தினால் அதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை வரி விலக்கு கிடைக்கும். அதற்குள் அந்த ஆதாயத்தை மறு முதலீடு செய்தால் போதும்.