சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

குளோபஸ் ஸ்பிரிட்ஸ் 3-வது காலாண்டு லாபம் அதிகரிப்பு!

3-வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.30.44 கோடியாக அதிகரிப்பு.

News image

Globus Spirits

Updated On :9 ஜனவரி 2026, 8:58 pm IST

புதுதில்லி: குளோபஸ் ஸ்பிரிட்ஸ் லிமிடெட், டிசம்பர் 31, 2025 உடன் முடிவடைந்த 3-வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.30.44 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பல்வேறு மதுபான பிராண்டுகளை விற்பனை செய்யும் குளோபஸ் ஸ்பிரிட்ஸ், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.41.12 லட்சம் வரிக்குப் பிந்தைய லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.882.96 கோடியுடன் ஒப்பிடுகையில் இது ரூ.938.36 கோடியாக உள்ளதாக தெரிவித்தது.

மொத்த செலவுகள் கடந்த ஆண்டு ரூ.884.04 கோடியுடன் ஒப்பிடுகையில், நிதியாண்டில் இது ரூ.899.22 கோடியாக இருந்தது. இதனிடையில், நடப்பு காலாண்டில், உற்பத்திப் பிரிவில் கடந்த வருடம், இதே காலகட்டத்தில் ரூ.329.4 கோடியுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ.440.8 கோடியாக அதன் வருவாயைப் பதிவு செய்தது.

நுகர்வோர் பிரிவில், 'பிரஸ்டீஜ் மற்றும் அதற்கும் மேற்பட்ட' வகை பிராண்ட் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், அதன் வருவாய் ரூ.43.3 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.44.9 கோடியாக பதிவு செய்த நிலையில், நுகர்வோர் பிரிவில், 'ரெகுலர் மற்றும் பிற' வகையான பிராண்ட், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், அதன் வருவாய் ரூ.228.8 கோடியுடன் ஒப்பிடுகையில் தற்போது ரூ.230.6 கோடியாக உயர்ந்துள்ளது.

Globus Spirits Ltd reported a multifold increase in consolidated profit after tax at Rs 30.44 crore for the third quarter ended December 31, 2025 driven by higher revenue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.