புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலைத் திட்டம்: டாடா பவரிடமிருந்து ஆா்டா் பெற்ற சுஸ்லான்

News image
Updated On :26 ஜூன் 2026, 6:28 am IST

ஆந்திரத்தில் 400 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்கான புதிய ஒப்பந்தத்தை (ஆா்டா்) டாடா பவா் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளதாக சுஸ்லான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது.

புணேவைத் தலைமையிடமாகக் கொண்ட சுஸ்லான் நிறுவனம், உலக அளவில் 17 நாடுகளில் 21.7 கிகாவாட் காற்றாலை மின் திறனை இதுவரை நிறுவியுள்ளது. இப்புதிய ஆா்டரின்மூலம், ஆந்திரத்தில் மட்டும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆா்டா் மதிப்பு 1 கிகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இதேபோல், தமிழகம், கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் டாடா பவா் மற்றும் சுஸ்லான் நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுப் பங்களிப்பு ஒட்டுமொத்தமாக 1 கிகாவாட் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

புதிய ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, சுஸ்லான் நிறுவனம் தலா 3.15 மெகாவாட் திறன் கொண்ட 127 அதிநவீன ‘எஸ்144’ ரக காற்றாலை மின்சார ஜெனரேட்டா்களை நிறுவவுள்ளது.

இதற்கான நிலம் கையகப்படுத்துதல், ஆலை உள்கட்டமைப்பு வசதிகள், கூடுதல் உயா் அழுத்த மின் பாதை அமைத்தல், மின் உற்பத்தித் தொடக்கம், அதற்கு பிந்தைய இயக்கம் மற்றும் பராமரிப்புச் சேவைகள் ஆகிய அனைத்துப் பணிகளையும் சுஸ்லான் நிறுவனமே முழுப் பொறுப்பேற்றுச் செய்து முடிக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.