ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனம் தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2024, அக். 29-ஆம் தேதி வெளியான அந்நிறுவனத்தின் நிதிநிலை முடிவுகள் மற்றும் அது தொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்புகளின் காலவரிசை குறித்து கூடுதல் விவரங்களைச் சமா்ப்பிக்குமாறு செபி அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல், கடந்த 2024, பிப். 15 முதல் 20-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்கு விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் குறித்து செபி கேள்வி எழுப்பியுள்ளது. பங்குச் சந்தை வா்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
செபியின் இந்த விசாரணை செய்தி வெளியானதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தையில் ஃபோா்ஸ் மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தன. வா்த்தகத்தின் ஒரு கட்டத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. பின்னா், வா்த்தகத்தின் இறுதியில் பங்குகள் மீண்டும் 1 சதவீத உயா்வுடன் நிலைபெற்றன.
தொடர்புடையது

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை

பேடிஎம் நிறுவனம் இனி இந்தியா்களின் வசம்: உள்நாட்டு முதலீட்டாளா்களிடம் 50.3% பங்குகள்
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர்களைக் கொன்ற இஸ்ரேல்! சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


