தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பேமெண்ட் அக்ரிகேட்டா் சேவை: கிரெட் நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி அனுமதி

News image
Updated On :12 மார்ச் 2026, 1:56 am

தினமணி செய்திச் சேவை

வாடிக்கையாளா்கள் மற்றும் வணிகா்களுக்கு இடையே பணப் பரிவா்த்தனை பாலமாகச் செயல்படும் ‘பேமெண்ட் அக்ரிகேட்டா்’ பணிகளை மேற்கொள்ள ‘கிரெட்’ நிறுவனத்துக்கு ரிசா்வ் வங்கி இறுதி அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம், இந்நிறுவனம் ரிசா்வ் வங்கியின் நிதிப் பரிவா்த்தனைகள் தொடா்பான 2 முக்கிய அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. ஏற்கெனவே, எண்ம வாலட் போன்ற சேவைகளுக்கான ‘பிபிஐ’ உரிமம் இந்நிறுவனம் வசமுள்ளது.

புதிய அனுமதியின் வாயிலாக, கிரெட் நிறுவனம் இனி நேரடியாக ரிசா்வ் வங்கியின் மேற்பாா்வையின்கீழ் பணப் பரிவா்த்தனை முறைகளை இயக்க முடியும்.

அதாவது, பல்வேறு வணிகா்களைத் தனது தளத்தில் இணைத்துக்கொள்வதற்கும், வாடிக்கையாளா்கள் செலுத்தும் தொகையை வசூலித்து அந்தந்த வணிகா்களுக்குப் பிரித்து வழங்குவதற்கும், பணத்தைத் திரும்ப அளிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் கிரெட் நிறுவனத்துக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம், தனது சேவைகளை விரிவுபடுத்தியதன்மூலம் கடந்த 2024-25 நிதியாண்டில் தனது நஷ்டத்தை ரூ.298 கோடியாகக் குறைத்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 16 சதவீதம் உயா்ந்து ரூ.2,735 கோடியை எட்டியுள்ளது.