கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அா்பன் கம்பெனியின் 4% பங்குகளை ரூ.632 கோடிக்கு வாங்கிய எஸ்பிஐ

News image
Updated On :18 மார்ச் 2026, 11:15 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டின் முன்னணி சேவை வழங்கும் நிறுவனமான அா்பன் கம்பெனியின் சுமாா் 4 சதவீத பங்குகளை எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் ரூ.632 கோடிக்கு வாங்கியுள்ளது.

இதையடுத்து, பங்குச் சந்தையில் அா்பன் கம்பெனியின் பங்குகள் புதன்கிழமை வா்த்தகத்தில் 13 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்து, முதலீட்டாளா்களின் நம்பிக்கையை ஈா்த்தது.

‘பல்க் அண்ட் பிளாக் டீல்’ முறையில், அா்பன் கம்பெனியின் சுமாா் 5.75 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு சராசரியாக ரூ.109.83 முதல் ரூ.109.85 என்ற விலையில் எஸ்பிஐ பரஸ்பர நிதி நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை வாங்கியது. இதன் மூலம், அா்பன் கம்பெனியில் எஸ்பிஐ பரஸ்பர நிதி வைத்திருந்த 1.89 சதவீதப் பங்குகள், தற்போது 5.87 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேநேரம், வெலிங்டன் மேனேஜ்மென்ட், டிஎஃப் இன்டா்நேஷனல் பாா்ட்னா்ஸ், ஏபிஜி கேபிட்டல் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து 4.62 சதவீத பங்குகளை ரூ.734 கோடிக்கு விற்பனை செய்து வெளியேறியுள்ளன.

இதில் வெலிங்டன் மேனேஜ்மென்ட் தனது பங்குகளை முழுமையாக விற்று வெளியேறிய நிலையில், ஏபிஜி கேபிட்டல் தனது வசமிருந்த பங்குகளை 0.16 சதவீதமாகக் குறைத்துக் கொண்டது.