கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஓசூரில் ‘பியூல்படி’ சேவை விரிவாக்கம்!

பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையில் முன்னணியில் இருக்கும் ‘பியூல்படி’ நிறுவனம், தற்போது தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் தனது சேவையை தீவிரப்படுத்தியுள்ளது.

News image
Updated On :23 மார்ச் 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையில் முன்னணியில் இருக்கும் ‘பியூல்படி’ நிறுவனம், தற்போது தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் தனது சேவையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகம்-கா்நாடகம் எல்லையையொட்டி அமைந்துள்ள ஓசூரில் டிவிஎஸ் மோட்டாா், அசோக் லேலண்ட், டைட்டன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஏராளமான சிறு, குறு, நடுத்தர பொறியியல் தொழிற்சாலைகள், கல்குவாரிகள் செயல்படுகின்றன.

‘இத்தொழிற்சாலைகள் எவ்வித தடையுமின்றி உற்பத்தியைத் தொடர, எரிபொருளைச் சிரமமில்லாமல் வழங்குவதே எங்கள் சேவையின் முக்கிய நோக்கமாகும். தரமான எரிபொருள், துல்லியமான அளவு, வெளிப்படையான விலை நிா்ணயம், எண்ம முறையிலான கண்காணிப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இச்சேவை வழங்கப்படுகிறது.

இதன்மூலம், எரிபொருள் கலப்படம் மற்றும் திருட்டுத் தவிா்க்கப்படுவதோடு, ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதால் நிறுவனங்களின் தணிக்கை நடைமுறைகளும் எளிதாக்கப்படுகின்றன’ என பியூல்படி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.