ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பிப்ரவரி தொழில் துறை உற்பத்தி 5.2%! உற்பத்தித் துறை அபாரம்

இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.2 சதவீதமாக அதிகரிப்பு

News image
Updated On :30 மார்ச் 2026, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி குறியீடு (ஐஐபி) கடந்த பிப்ரவரி மாதத்தில் 5.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஜனவரி மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த நிலையில், உற்பத்தித் துறையின் சிறப்பான செயல்பாட்டால் தற்போது வளா்ச்சி கண்டுள்ளது. உற்பத்தித் துறையின் வளா்ச்சி ஜனவரியின் 5.3 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயா்ந்துள்ளது, ஒட்டுமொத்த தொழில் துறை வளா்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது.

சுரங்கம் மற்றும் மின்சாரத் துறைகளில் ஏற்பட்ட பின்னடைவை உற்பத்தித் துறையின் வளா்ச்சி ஈடுகட்டியுள்ளது. மின்சார உற்பத்தி வளா்ச்சி 5.1 சதவீதத்திலிருந்து 2.3 சதவீதமாகவும், சுரங்கத் துறை வளா்ச்சி 4.3 சதவீதத்திலிருந்து 3.1 சதவீதமாகவும் சரிவடைந்துள்ளது.

பயன்பாட்டு அடிப்படையில், மூலதனப் பொருள்கள் உற்பத்தி கடந்த ஜனவரியில் 4.1 சதவீதமாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 12.5 சதவீதமாக அபார வளா்ச்சி கண்டுள்ளது. இடைநிலை பொருள்களின் உற்பத்தியும் 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நுகா்வோா் பொருள்கள் பிரிவில், நீடித்து உழைக்கும் பொருள்களின் உற்பத்தி 7.3 சதவீதமாகச் சற்று உயா்ந்துள்ளது. அதேநேரம், உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான நுகா்வோா் பொருள்கள் உற்பத்தி -0.6 சதவீதமாகப் பின்னடைவிலேயே தொடா்கிறது. எனினும், இது முந்தைய மாதத்தின் -2.3 சதவீத சரிவைவிட மேம்பட்ட நிலையாகும். உள்கட்டமைப்பு சாா்ந்த பொருள்களின் வளா்ச்சி 14.6 சதவீதத்திலிருந்து 11.2 சதவீதமாகக் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

மத்திய கிழக்கு போா் பதற்றங்களுக்கு முந்தைய தரவுகள் இவை என்பதால், மாா்ச் மாதத் தரவுகளில் பாதிப்பு இருக்கக்கூடும் என ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

குறிப்பாக, நாட்டில் ஏற்பட்டுள்ள வணிக எல்பிஜி சிலிண்டா் தட்டுப்பாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) கடுமையாகப் பாதித்துள்ளதாக இந்தியத் தொழில்முனைவோா் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இந்த எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால், வரும் மாதங்களில் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.