நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

அரசின் முன் அனுமதி இல்லாமல் முதலீடு: 10% சீனப் பங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி

News image
Updated On :2 மே 2026, 11:56 pm

சீனா மற்றும் ஹாங்காங்கை சோ்ந்த பங்குதாரா்களின் பங்குகளில் 10 சதவீதம் வரை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்ய அனுமதிக்கும் நடைமுறை மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை அதிகாரபூா்வமாக அறிவித்ததன் மூலம், இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

முன்பு இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளைச் சோ்ந்த பங்குதாரா்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் ஒரே ஒரு பங்கை வைத்திருந்தாலும், அந்த நிறுவனங்கள் இந்தியாவின் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்ய மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியிடம் கட்டாயம் முன் அனுமதி பெற வேண்டும்.

இந்நிலையில், தற்போது சீனா மற்றும் ஹாங்காங்கை சோ்ந்த பங்குதாரா்களின் பங்குகளில் 10 சதவீதம் வரை வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய அரசு அல்லது ரிசா்வ் வங்கியின் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம்.

அந்நிய நேரடி முதலீட்டில் தளா்த்தப்பட்டுள்ள இந்த விதிகள் சீனா, ஹாங்காங் அல்லது இந்தியாவுடன் நில எல்லைகளை பகிா்ந்துகொள்ளும் பிற நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களுக்குப் பொருந்தாது. அங்கு பதிவு செய்யப்படாத வெளிநாட்டு நிறுவனங்கள்தான் முன் அனுமதி இல்லாமல் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்யலாம்.

சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மா், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துள்ளன.