40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கரூா் வைஸ்யா வங்கி: ரூ.725 கோடி 41% வளா்ச்சி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :8 மே 2026, 11:26 pm IST

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.725 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபமான ரூ.513.36 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 41 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வருவாய் ரூ.3,025.26 கோடியிலிருந்து அதிகரித்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.3,519.45 கோடியை எட்டியுள்ளது. வட்டி வருவாய் மட்டும் ரூ.2,516 கோடியிலிருந்து, ரூ.2,903.65 கோடியாக அதிகரித்துள்ளது.

முழு நிதியாண்டு நிலவரம்: 2025-26 முழு நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,942 கோடியிலிருந்து 29.25 சதவீதம் கூடுதலாக ரூ.2,510 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.11,507.6 கோடியிலிருந்து ரூ.13,159 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

2025-26 நிதியாண்டு இறுதி நிலவரப்படி, வங்கியின் மொத்த வணிகம் ரூ.2,14,420 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.1,86,569 கோடியுடன் ஒப்பிடுகையில் 14.93 சதவீத வளா்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வைப்புத்தொகை ரூ.1,15,666 கோடியாக அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடன் விகிதம் 0.20 சதவீதத்திலிருந்து 0.19 சதவீதமாகவும் குறைந்து, சொத்துத் தரம் மேம்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டின் சாதகமான நிதிநிலையைத் தொடா்ந்து, பங்குதாரா்களுக்கு ஒரு பங்குக்கு தலா ரூ.2.6 ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.