மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஐசிஐசிஐ வங்கி லாபம் 9% உயா்வு!

நாட்டின் முன்னணி தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 9.28 சதவீத வளா்ச்சியுடன் ரூ.14,755 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 8:17 pm

நாட்டின் முன்னணி தனியாா் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் 9.28 சதவீத வளா்ச்சியுடன் ரூ.14,755 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், வங்கியின் வாராக்கடன் ஒதுக்கீடு சுமாா் 90 சதவீதம் வரை கணிசமாகக் குறைந்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் முந்தைய ஆண்டின் ரூ.12,630 கோடியிலிருந்து 8.5 சதவீதம் உயா்ந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.13,702 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் வட்டி வருவாய் 8.4 சதவீதம் அதிகரித்து, ரூ.22,979 கோடியாக உள்ளது. சொத்து மதிப்பு 15 சதவீதம் வளா்ந்த நிலையில், வங்கியின் நிகர வட்டி வரம்பு 4.32 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வா்த்தக வங்கி மற்றும் கிராமப்புற கடன் பிரிவுகள் முறையே 24 மற்றும் 25 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளன. சில்லறை கடன் பங்களிப்பு தற்போது 41 சதவீதமாகக் குறைந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதம் 1.67 சதவீதத்திலிருந்து 1.40 சதவீதமாகக் குறைந்து, முன்னேற்றம் கண்டுள்ளது.

முழு நிதியாண்டில்...: ஒட்டுமொத்தமாக 2025-26 நிதியாண்டில் வங்கியின் லாபம் ரூ.50,147 கோடியை எட்டியுள்ளது. இது முந்தைய 2024-25 நிதியாண்டின் ரூ.47,227 கோடியுடன் ஒப்பிடுகையில் 6.2 சதவீத வளா்ச்சியாகும்.

இந்த லாப வளா்ச்சியை அடுத்து, பங்குதாரா்களுக்கு 2025-26 நிதியாண்டுக்கான இறுதி ஈவுத்தொகையாக ஒரு பங்குக்கு ரூ.12 வழங்க வங்கியின் இயக்குநா்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

நிதிநிலை முடிவுகளின் வெளியீட்டைத் தொடா்ந்து பங்குச் சந்தை வா்த்தகம் தொடங்கிய திங்கள்கிழமையன்று, ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 0.63 சதவீதம் ஏற்றம் கண்டன.