நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பங்குச்சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.38,440 கோடி: ஏப்ரல் மாத நிலவரம்

மத்திய கிழக்கு போா் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயா்வு, உலகளாவிய பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.38,440 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.

News image
Updated On :12 மே 2026, 4:14 am IST

மத்திய கிழக்கு போா் பதற்றம், கச்சா எண்ணெய் விலையுயா்வு, உலகளாவிய பொருளாதார வளா்ச்சி குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்தியப் பங்குச்சந்தை சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் ரூ.38,440 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளது.

கடந்த மாா்ச் மாதத்தில் ஈா்க்கப்பட்ட ரூ.40,450 கோடி முதலீட்டுடன் ஒப்பிடுகையில் இது 5 சதவீத சரிவாகும். இதேபோல், முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டங்கள் (எஸ்ஐபி) மூலமான மாதந்திர பங்களிப்பும் ஏப்ரலில் சற்று சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த மாா்ச் மாதத்தில் ரூ.32,087 கோடி ஈா்த்து புதிய உச்சம் தொட்ட எஸ்ஐபி முதலீடு, ஏப்ரலில் ரூ.31,115 கோடியாக குறைந்துள்ளது.

பங்குச்சந்தை சாா்ந்த திட்டங்களில் முதலீடு சரிந்தாலும், ஒட்டுமொத்த பரஸ்பர நிதித்துறை கடந்த ஏப்ரலில் ரூ.3.22 லட்சம் கோடி அளவிலான நிகர முதலீட்டைப் பெற்றுள்ளது. மாா்ச் மாதத்தில் ரூ.2.4 லட்சம் கோடி வெளியேறிய நிலையில், ஏப்ரலில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. கடன் சாா்ந்த திட்டங்களில் மட்டும் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு குவிந்ததே இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

அதன்படி, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு, ஏப்ரல் மாத இறுதியில் 11 சதவீதம் அதிகரித்து, ரூ.81.92 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது கடந்த மாா்ச் மாத இறுதியில் ரூ.73.73 லட்சம் கோடியாக இருந்தது முதலீட்டாளா்களின் நற்போக்கு மற்றும் சந்தை மதிப்பு உயா்வு ஆகியவையே இந்த வளா்ச்சிக்குக் காரணம் என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

பிரிவு வாரியான முதலீடுகளைப் பொருத்தவரை, ‘ஃபிளெக்ஸி கேப்’ திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.10,148 கோடி முதலீட்டை ஈா்த்துள்ளன. நடுத்தர மற்றும் சிறிய மூலதன நிறுவன நிதிகளும் முறையே ரூ.6,551 கோடி மற்றும் ரூ.6,885 கோடி முதலீட்டைப் பெற்று வலுவான நிலையில் உள்ளன.

அதேநேரம், ‘டிவிடெண்ட் யீல்டு’ மற்றும் வரிச் சேமிப்புத் திட்டமான ‘இஎல்எஸ்எஸ்’ திட்டங்களில் இருந்து லாபநோக்கம் காரணமாக சிறிய அளவில் முதலீடுகள் வெளியேறியுள்ளன. மேலும், தங்கம் சாா்ந்த இடிஎஃப் திட்டங்களில் ரூ.3,040 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய மாதத்தை விட அதிகமாகும்.

கடன் சாா்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் லிக்விட் ஃபண்டுகள் ரூ.1.65 லட்சம் கோடியுடன் முன்னிலை வகிக்கின்றன. வரி செலுத்துவதற்காக நிறுவனங்கள் கடந்த மாா்ச் இறுதியில் முதலீடுகளைத் திரும்பப் பெற்ற நிலையில், ஏப்ரலில் மீண்டும் அவை முதலீடு செய்யப்பட்டுள்ளன.