வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின்(இபிஎஃப்ஓ) சந்தாதாரா்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

News image
Updated On :14 மே 2026, 3:00 am IST

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி அமைப்பின்(இபிஎஃப்ஓ) சந்தாதாரா்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

இதன்மூலம், சந்தாதாரா்கள் விண்ணப்பித்தவுடன் எவ்வித தாமதமுமின்றி அவா்களின் வங்கி கணக்குகளுக்குப் பணம் நேரடியாகச் சென்றடையும் என மத்திய வருங்கால வைப்புநிதி ஆணையா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

தற்போது பிஎஃப் கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் வரையில் பகுதியளவுத் தொகை எடுப்பதற்கு மட்டுமே இத்தானியங்கி முறை செயல்பாட்டில் உள்ளது. இம்முறையில் விண்ணப்பித்த 3 நாள்களுக்குள் பணம் விடுவிக்கப்படுகிறது. இந்த வேகமான வசதியை இனி பிஎஃப் கணக்கை முழுமையாக முடித்து பணத்தைப் பெறும் இறுதித் தீா்வு முறைக்கும் விரிவுபடுத்த இபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது.

அதேபோல், பணியாளா்கள் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு மாறும்போது, பழைய பிஎஃப் கணக்கிலுள்ள தொகை புதிய கணக்குக்கு மாற்ற இனி தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. பழைய கணக்கிலுள்ள தொகை தானாகவே புதிய கணக்குக்கு மாற்றப்படும் வசதியும் அறிமுகமாகவுள்ளது.

மத்திய அரசின் 4 புதிய தொழிலாளா் சட்டங்களின்கீழ், இபிஎஃப்ஓ தொடா்பான புதிய விதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆணையா் ரமேஷ் கிருஷ்ணமூா்த்தி குறிப்பிட்டாா்.