தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ரூ.87 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்: இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது

ரூ.87 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக  இலங்கையைச் சேர்ந்த இருவர் மும்பை விமான நிலையத்தில் அதிரடியாக கைது

News image
Updated On :17 ஏப்ரல் 2017, 2:50 am

DIN

மும்பை: ரூ.87 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக  இலங்கையைச் சேர்ந்த இருவர் மும்பை விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
இலங்கையைச் சேர்ந்த ஜமீர் வாஹித் (42) மற்றும் அல்தாஃப் ஹமீது ஆகிய இருவர்  துபையிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் அதிகாலை வந்தனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் அவர்களிடம் தனித்தனியாக நடத்திய சோதனையில் மலக்குடலில் தங்கக் கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாஹித்திடமிருந்து 1,516 கிராம் எடையுள்ள 13 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.45,48,000.
அதேபோன்று ஹமீதிடமிருந்து 1,399 கிராம் எடையுள்ள 12 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.41,97,000.
அவர்கள் இருவரும் இலங்கையின் புட்டலம் மாவட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஜவுளி வியாபாரம் தொடர்பாக அடிக்கடி இந்தியா வந்து செல்வதும் விசாரணையில் தெரியவந்தது.
தங்கம் கடத்திய வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, துபையிலிருந்து சனிக்கிழமை மும்பைக்கு விமானத்தில் வந்த சையது நூருலமீன் (26) என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.