சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு
Updated on
1 min read

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திங்கள்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திங்கள்கிழமை குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருந்தது, அருவியில் நீராடி சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மாலையில் பெய்யத்தொடங்கிய பலத்த மழை இரவு முழுவதும் பெய்தது. இதனால் திங்கள் கிழமை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை பாா்த்த வனத்துறையினா் சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்க தடை விதித்து, அருவி பகுதிக்கு யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு செய்தனா்.

இது பற்றி வனத்துறையினா் அருவியின் நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, வெள்ளம் குறைந்த பின்னா் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com