கவிதை எழுதியோ
கண்ணீர் வடித்தோ..
எம் சோகத்தை
ஆற்றிக் கொள்ளமுடியாது..
உயிரைப் பிரிந்தவனுக்கு
உணர்வுகள் எப்படி இருக்கமுடியும்..
தமிழகத்தின் தங்கத் தாரகையே
சந்தனப்பேழைக்குள் உறங்கும் - உன்
சரித்திரத்தை - நாளைய
சந்ததிகள் வாசிக்கும்..
இன்று எங்களை தொற்றிக்
கொண்ட சோகத்தை
எங்கு தொலைப்பது..
காற்று கூட நிரப்ப முடியாத
வெற்றிடமானது நீ வாழ்ந்த
தமிழகம்..!
உன்னைப் போலவே இப்போது
சுவாசம் தேடி அலைகிறது.
மானுடச் சந்தையில்
விலைமதிக்க முடியாத
உயிர் வாங்கிப் போன
எமனை ஒன்று கேட்கிறேன்..
ஏனடா..
ஒற்றைக் கோப்பையில்
ஒட்டுமொத்தமாய்
ஒரு தேசத்தின்
உயிர் குடித்தாய்
-திருமலை சோமு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே சுற்றுலாத்துறையில் வேலை வேண்டுமா?

அபிஷேக் பானர்ஜி தாக்குதல்! கொல்கத்தாவில் மமதா நாளை தர்னா!

பொறியியல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

2000 ஆண்டுகள் பழமையான ஏழூர் கண்ணாடி பல்லக்கு திருவிழா!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



