1813-ல் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்ற நீண்ட விவாதங்களின் பலனாக இந்திய பாரம்பரியக் கல்வியின் வீச்சு, இயல்பு (மற்றும் இன்றைய நிலை) குறித்து விரிவான தகவல்களைச் சேகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவில் மத, ஒழுக்கம் சார்ந்த மேம்பாட்டைக் கொண்டுவரவேண்டும் என்பதிலேயே இந்த விவாதங்கள் கவனத்தைக் குவித்திருந்தன. எந்தவொரு கொள்கையும் வகுக்கப்படுவதற்கு முன்பாக ஏற்கெனவே இருப்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாக இருந்தது. ஆனால், இந்த ஆய்வுகளின் தரமும் வீச்சும் ஒவ்வொரு பிரஸிடென்ஸிக்கும் மாறுபட்டது. மாவட்டத்துக்கு மாவட்டம்கூட வேறுபட்டது (இப்படியான எந்தவிதத் தகவல்களைச் சேகரிக்கும்போதும், அதுவும் அப்படித் தகவல்களைச் சேகரிப்பதே முற்றிலும் புதிய செயல்பாடாக இருக்கும்போது, இப்படி வேறுபடுவது இயல்புதான்).