உண்மையில், அங்கே இரண்டு கொலைகள் அரங்கேறியிருந்தன என்றே கூற வேண்டும். ஒன்று டர்வால் என்ற பெண்ணுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது என்று சொல்லி, இயங்கிக்கொண்டிருந்த அவரது இதயத்தை நிறுத்தியது. மூளைச்சாவு என்ற வரையறை, புரிந்துகொள்ளல் எப்போதுமே தவறானது. மூளைச்சாவு ஏற்பட்டதாகச் சொல்லி உறுப்புகள் பிடுங்கப்பட்டவர்கள், அப்படிச் செய்யப்படாமல் இருந்திருந்தால், நீண்டகாலம் ஆரோக்கியமாக உயிர் வாந்திருப்பார்கள்; மனித உடலானது உறுப்பு உறுப்பாக தனித்தனியாக செயல்படுவதில்லை. அது ‘ஒட்டுமொத்தமான பரிபூரணமாகவே’ செயல்படுகிறது என்று நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் மட்டுமல்ல, டாக்டர் ஹெக்டேயும் கூறுகிறார்.