மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தக்காளி தோசை

Published On :

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 2 கிண்ணம்
முழு உளுந்து - கால் கிண்ணம்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
பெருங்காயப்பொடி - சிறிதளவு
பழுத்த தக்காளி - 4
எண்ணெய்  - தேவைக்கேற்ப
மாவில் கலப்பதற்கு தேவையான பொருட்கள்
சீரகம் - 1 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 10
கொத்துமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:
இரவே அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊற வைத்து, காலையில் மாவு அரைத்து வைத்து விட்டால், இரவு டிபனுக்கு தயாரிக்கலாம். முதலில், பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.


பிறகு அத்துடன் நறுக்கிய தக்காளிகளையும் சேர்த்து அரைக்கவும். குறைந்த தண்ணீர் விட்டு, ஊறின அரிசி, உளுந்து, வெந்தயத்தை அரைத்துக் கொள்ளவும். நன்கு மசிந்ததும், தக்காளி - மிளகாய் போன்றவற்றை அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு அரைக்கவும். (ரவா தோசை மாவு போல நீர்க்க இருக்க வேண்டும்). சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்துமல்லி ஆகியவை மாவில் சேர்த்து,  6-7 மணி நேரம் புளிக்க வைக்கவும்.


ரவா தோசை போல, ஓரத்திலிருந்து மாவு ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, ரோஸ்ட்டாக வார்த்து எடுக்கவும். மிகவும் ருசியான, லைக்கோபீன் நிறைந்த தக்காளி தோசைகளை, வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.